சிவபெருமானை மணம் கமழும் மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவரை நல்ல மணம் வாய்ந்த நீரால் அபிஷேகித்து, பூக்களால் அலங்கரித்து வலம் வந்து வணங்க வேண்டும். சிவாலயங்களை சாணமிட்டு மெழுகி, நீர்த்தெளித்து பெருக்கி சிவனை வாழ்த்தி வணங்க வேண்டும்.தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். நெய்யும் பாலும் கொண்டு சிவனை அபிஷேகிக்க வேண்டும்.சிவலிங்கத்துக்கு நல்ல ஆடைகளை அணிவிக்க வேண்டும். எருக்கு மலர்களை இரட்டை மாலைகளாகக் கட்டி, லிங்கத்தின் தலையில் சாத்த வேண்டும்.

No comments:
Post a Comment